சான்றிதழ் வழங்குவதில் நீதிமன்ற அதிகாரத்தை அரசு அதிகாரிகளிடம் வழங்கியதைக் கண்டித்து கோவையில் இன்று வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமதமாக விண்ணப்பிக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கறிஞர் மூலமாக அதனை பெறும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்து நீதிமன்றத்திற்கு பதிலாக ஆர்டிஓ-விடமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற கட்டணத்தினை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

தாமதமாக விண்ணப்பிக்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற நீதிமன்றத்தில் பதிவு செய்து வழக்கறிஞர் மூலமாக அதனை பெறும் சட்டம் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் மாற்றம் செய்து நீதிமன்றத்திற்கு பதிலாக ஆர்டிஓ-விடமே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தைக் கண்டித்தும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நீதிமன்ற கட்டணத்தினை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவையில் வழக்கறிஞர்கள் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடமும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.