கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் தண்டபாணி லோகநாதன். இவர் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நிறுவணத்தில் மென் பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து குழந்தைகள் மீதான வன்முறைகள் நடைபெறும் சூழலில் குழந்தைகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி கோவையிலிருந்து பெங்களூருக்கு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை 2 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை துவக்கியவர் பவானி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவால பகுதிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடைகிறார்.

சைக்கிள் பிரியரான இவர் இதே போன்று பல விழிப்புணர்வு நிகழ்விற்க்காக உதகை ஈரோடு சேலம் கேரள மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விரைவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.

இன்று அதிகாலை 2 மணிக்கு காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை துவக்கியவர் பவானி சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் மடிவால பகுதிக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்றடைகிறார்.

சைக்கிள் பிரியரான இவர் இதே போன்று பல விழிப்புணர்வு நிகழ்விற்க்காக உதகை ஈரோடு சேலம் கேரள மாநிலம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை விரைவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
இவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துவோம்.