சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த காதல் ஜோடி சாதி ரீதியாக தாங்கள் கொலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கோரி கோவை மாநகர இணை ஆணையாளரிடம் தஞ்சம்.
நாமக்கல் மாவட்டம் கடச்சநல்லூரைச் சேர்ந்த சீதாராமனின் மகன் ராம்குமார். மெக்கானிக் பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் ஆண்களுக்கான ஆடை விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த கவிதா என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் ராம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் கவிதாவிற்கு கட்டாயமாக வேரொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து நேற்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் இன்று மருதமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கவிதா தனது பெற்றோர்கள் மூலமாக தனது கணவருக்கும் தனக்கும் உயிர்க்கு உத்திரவாதம் இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல் மாவட்டம் கடச்சநல்லூரைச் சேர்ந்த சீதாராமனின் மகன் ராம்குமார். மெக்கானிக் பொறியியல் பட்டதாரியான இவர் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியில் ஆண்களுக்கான ஆடை விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் தீவட்டிபட்டியை சேர்ந்த கவிதா என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்கள். இந்த காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் ராம்குமார் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் கவிதாவின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பெற்றோர்கள் கவிதாவிற்கு கட்டாயமாக வேரொருவருடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து நேற்றைக்கு வீட்டை விட்டு வெளியே வந்த இருவரும் இன்று மருதமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். கவிதா தனது பெற்றோர்கள் மூலமாக தனது கணவருக்கும் தனக்கும் உயிர்க்கு உத்திரவாதம் இல்லாததால் உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி மாநகர சட்டம் ஒழுங்கு காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்தனர்.