கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. மாறாக மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்திற்கு 1 லோடு தண்ணீர் வழங்க 2600 ரூபாய் கொடுக்க வேண்டும் என பதில் கடிதத்தினை நீதிமன்ற நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
நாள் ஒன்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குறைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்லும் நிலையில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாநகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.