வாலங்குளம் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகள் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு


கோவை LGB நகர் ஹைவே காலனி பின்புறம் வாலங்குளம் பகுதியில் அகற்றப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. LGB நகர் பகுதில் இருந்த சுமார் 1௦௦௦ குடிசை வாழ் மக்களை வேறு வீடு தருவதாகவும் வாலங்குளம் பகுதியில் சுத்தம் செய்வதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு மக்களை கட்டாயப்படுத்தி அப்புற படுத்தி உள்ளனர். தற்போது, குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி அரசால் வெளியற்றிய பின்னர் அந்த இடம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தினில் கட்டிடகழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தினில் நடைபாதை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 



ஆனால், அவர்களில் சுமார் 350 குடிசை வாசிகளுக்கு மாற்று வீடு தரப்படவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்த குடிசை வாசி மக்கள் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து குடிசை மாற்று வாரியம் அலுவரை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...