நீலகிரி மாவட்டம், குன்னூர் சிஎம்எஸ் அருகில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில், இன்று 10 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி குமார் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜீவா என்னும் சிவகுமார் (16) மண்ணில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அப்போது, திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி குமார் (35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜீவா என்னும் சிவகுமார் (16) மண்ணில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.