கோயமுத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் மாநகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் தலைமையில் (ஸ்மார்ட் சிட்டி) பொலிவான நகரம் தொடர்பான மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகர்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி, கண்காணிப்பு பொறியாளர் நடராஜ், மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல், தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

