கோவையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையுடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக, வெயில் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் கோவையில் பரவலாக பலத்த மழை பெய்தது. காந்திபுரம், ரயில்நிலையம், சிங்காநல்லூர், உக்கடம் உள்ளிட்ட நகர பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டியது. இதனிடையே ரயில் நிலையம் முன்பாக மழை நீருடன், கழிவு நீர் கலந்து சாலைகளில் ஒடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து கோவையில் மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு நீக்கி வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.