ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இன்று மாலை ஈரோட்டில் நதிநீர் இணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவும், ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு திமுக-வினர் வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் கார் மூலம் ஈரோடு புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் குளம் தூர்வாரும் பணி துவக்க நிகழ்ச்சி, பன்னீர்செல்வம் பூங்காவில் புதிதாக திறக்கப்பட உள்ள பெரியார், அண்ணா சிலைகளை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் இன்று மாலை ஈரோட்டில் நதிநீர் இணைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காகவும், ஈரோட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு திமுக-வினர் வாழ்த்து முழக்கங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அவர் கார் மூலம் ஈரோடு புறப்பட்டுச் சென்றார். ஈரோட்டில் குளம் தூர்வாரும் பணி துவக்க நிகழ்ச்சி, பன்னீர்செல்வம் பூங்காவில் புதிதாக திறக்கப்பட உள்ள பெரியார், அண்ணா சிலைகளை பார்வையிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.