மரங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சேவையில் கர்நாடகாவிற்கு உதவிய கோவை ஓசை தன்னார்வ அமைப்பினர்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை தன்னார்வ அமைப்பினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களை வேருடன் இடமாற்றம் செய்து மறுவாழ்வு அளித்து வருகின்றனர். சாலை விரிவாக்கப் பணியின் போது இவர்கள் மேற்கொள்ளும் இந்தச் சேவை அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



இந்நிலையில், கர்நாடகாவில் சாலை விரிவாக்கப்பணிக்காக அப்பகுதியில் இருந்த 500 மரங்கள் வெட்ட வேண்டிய  சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, பத்திரிகைசெய்திகள் வாயிலாக ஓசை அமைப்பின் மரங்களுக்கு மறுவாழ்வு குறித்த தகவல் அறிந்த கர்நாடக வனத்துறையினர் ஓசை அமைப்பின் சையது அவர்களை தொடர்புகொண்டு மரத்தினை இடமாற்றம் செய்வது குறித்து உதவிகோரியுள்ளது.



இதுகுறித்து ஓசை சையது நமது சிம்ப்ளிசிட்டி நிருபரிடம் பகிர்ந்துகொண்டதாவது:- சாலை விரிவாக்கப் பணிக்காக கர்நாடகாவில் ஹூப்லி முதல் ஹசக் வரையிலான சாலையில் இருந்த 500 மரங்களை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நடவு செய்ய கர்நாடக வனத்துறை தலைமை வனப்பாதுகாவலர் மஞ்சுநாத், தமிழகத்தில் கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பினை தொடர்புகொண்டு உதவிகோரினார். இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவிற்கு சென்ற எனது தலைமையிலான ஓசை தன்னார்வ குழுவினர் மரங்களை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முடிவுசெய்தோம். அங்கு நமது பாரம்பரிய மண்ணின் மரங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது.

இதற்கான மாற்று இடங்களையும், மரங்களை வேருடன் அகற்றி எடுத்துச் செல்ல தேவையான அனைத்து வாகன வசதி மற்றும் ஊழியர்களையும் கர்நாடக அரசே வழங்கியது. இதில் வியக்கத்தக்க விசயம் என்னவென்றால், வழக்கமாக மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு வேருடன் கூடிய மரத்தின் முக்கியப்பகுதி மட்டுமே இடமாற்றம் செய்யப்படும். ஆனால், கர்நாடக அரசு முழு மரங்களையும் வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியது. அதன்படியே, தற்போது வரை ஐந்துக்கும் மேற்பட்ட மரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.



எங்களுடன் இணைந்து அம்மாநில வனத்துறையினரும் மரங்களை அகற்ற உதவினர். ஒவ்வொரு மரங்கள் வேருடன் இடமாற்றம் செய்யும் போது அம்மாநில அமைச்சர் நேரில் வந்து பணிகள் குறித்து ஆய்வு செய்து ஓசை அமைப்பினர் மற்றும் வனத்துறையினரை ஊக்குவித்தார். மேலும், ஐந்தாவது மரம் இடமாற்றம் செய்யும் போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா நேரில் வந்து பார்வையிட்டு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். 



மேலும், அங்குள்ள பயிற்சி வனத்துறையினர்களுக்கும் மரங்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வேருடன் இடமாற்றம் செய்வது குறித்தான பயிற்சிகள் ஓசை தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு ஓசை சையது கூறினார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...