கோவையை சேர்ந்த திருநங்கைகளை பாலியல் தொழிலுக்கு வர சில திருநங்கைகள் வற்புறுத்துவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திம் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், ஒத்தகால்மண்டபம் பகுதியை சேர்ந்த திருநங்கை பூர்நித்தா என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், திருநங்கைகள் ஜமாத் என்ற அமைப்பில் திருநங்கைகளை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர். அதனால் அந்த அமைப்பில் இருந்து வெளியேறி திருநங்கைகள் மறுவாழ்வு மற்றும் விழிப்புணர்வு சமூக நலச்சங்கம் என்ற பெயரில் இயக்கம் துவக்கப்பட்டு நன்முறையிலான பல பணிகளை திருநங்கைகளாகிய நாங்கள் செய்து வருகிறோம். இருப்பினும், தங்களை பாலியல் தொழிலுக்கு வரவும், எந்தவித புதிய அமைப்பும் தொடங்கக்கூடாது என்றும் கூறி கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.
தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்திம், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் காவல்துறையினர் மறுத்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.