பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்- உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி ஆணையர் பேச்சு


உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு கோவை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார தூய்மை குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோவை மாநகரத்தில் இன்று நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பை தரத்தை பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேன் சிறப்புரையாற்றினார்.

அப்போது, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அன்றாடம் வார்டுவாரியாக சென்று குப்பைகளை தரம் பிரித்து பெற்றுச்செல்கின்றனர். மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி குப்பையினை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்க வேண்டும். தொடர்ந்து, கோவை மாநகராட்சியை சுகாதாரமிக்க, தூய்மையான மாநகரமாக பாதுகாக்க வேண்டும் என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...