இதயம் துடிப்பு இருக்கும்போதே மற்றொரு நோயாளிக்கு இதயத்தை பொறுத்தி கே.எம்.சி.எச் மருத்துவர்கள் சாதனை

இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு இதயத்தை நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தி கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதய நோய் உள்ளவர்களுக்கு இதயத்தை மாற்றிவைக்கும் ஆர்த்தோடாபிக் இதய மாற்று அறுவை சிகிச்சையை தற்போது உலகம் முழுவதும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் பலவீனமாக இருந்த இதயத்துடன் தானமாக பெறப்பட்ட மற்றொரு இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் 45 வயது நோயாளிக்கு பொறுத்தி கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



ரத்தத்தை உடலுக்குள் உந்தி தள்ள முடியாத நிலையில் 10 சதவீதம் மட்டுமே செயலாக்கத்துடன் இருந்த நோயாளி ஒருவருக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி மற்றும் இச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பிரசாந்த் வைத்தியநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இரண்டு இதயங்களை கொண்ட முதல் மனிதராக அந்நோயாளி உருமாறியுள்ளதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.



மேலும் இதயம் மாற்று அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் அழுத்தம் இருந்தால் அச்சிகிச்சையை இதுவரை மருத்துவர்கள் தவிர்த்து வந்துள்ளதாகவும் தற்போது ஹெட்டிரோடாபிக் என்ற இந்த சிகிச்சை மூலம் உலகம் முழுவதும் இது போன்ற சிக்கலான இதயம் பொறுத்தும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட இதயத்தை தற்போது இந்நோயாளிக்கு பொறுத்தி உள்ளதாகவும் அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...