ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளதாக கோவையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி



கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி கூறிதாவது:-

மாடுகளை சந்தை படுத்துதலில் உள்ள சில விதிமுறைகளில் மட்டுமே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்கவும், கள்ளச்சந்தையை ஒழிக்கவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மாட்டிறைச்சி விவகாரம் குறித்து நடைபெறும் போராட்டத்தில் தாக்குதல் நடைபெறுவது தவறானது. யாரையும் தாக்க தனிப்பட்ட அதிகாரம் கிடையாது" என்றார்.

இதனைத்தொடர்ந்து, இறைச்சி விவகாரம் அடுத்து திராவிட நாடு என்ற முழக்கம் எழுந்துள்ளது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, "திராவிட நாடு என்று எதுவும் இல்லை. வரலாற்று புத்தகத்தில் தவறாக குறிப்பிட்டு இருக்கும் திராவிட நாடு என்பதை மாற்ற வேண்டும்" என சுப்புரமணிய சாமி வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக இரு அணிகள் இல்லை. பன்னீர் செல்வம் அணி மட்டுமே தனியாக உள்ளார். சட்டப்படியே பழனிசாமி அணி தேர்வு செய்யப்பட்டு ஆட்சி செய்து வருகிறது. 

எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மை உள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தவறு. ஜனாதிபதி தேர்தலில் பாஜக-விற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது. இதன் மூலம் தனி பெரும்பான்மையுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். மேலும் திமுக தவிர தேச பத்தி உள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தலை சேர்ந்து சந்திப்போம்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...