தமிழக முதலமைச்சருக்கு வல்லார கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகள் அனுப்பி தமிழ் புலிகள் அமைப்பினர் நூதன போராட்டம்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டி முடித்தது உள்ளிட்டு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் மறந்து அதிகமாக கட்சி செயல்பாடுகளில் மட்டுமே தமிழக முதலமைச்சர் ஈடுபட்டு வருவதாகவும், அவருக்கு தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை நினைவுகூறும் வகையிலும் தமிழக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் ஞாபக சக்திகளை அதிகரிக்கும் மாத்திரைகளை அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டத்தில் இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அஞ்சல் நிலையத்திற்கு முதலமைச்சருக்கு அனுப்ப வல்லாரை கீரை, வெண்டைக்காய், மாத்திரைகள் உள்ளிட்டவற்றை தமிழ் புலிகள் அமைப்பினர் கொண்டுவந்தனர். அப்பொருட்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், போலி டாஸ்மாக் கடைகள், பள்ளி கல்வி துறையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தற்போது உள்ள நிலையில் தமிழக அரசு மக்கள் மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தும் விதமாக தமிழ் புலிகள் சார்பில் வல்லாரை கீரை, வெண்டைக்காய் மற்றும் மாத்திரைகளை அனுப்பி வைக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...