மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கோவை மாவட்ட பெண்கள்

பெண்களின் வாழ்வாதாரத்ததை உயர்த்திட தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் (மகளிர் திட்டம்) எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்து பெண்களின் வாழ்வில் ஒளியேற்றிய தமிழக அரசுக்கு கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் புதிய சுயஉதவிக்கழு அமைத்தல், வங்கிக்கடன், வேலைவாய்ப்பு முகாம், இளைஞர்களுக்கான தொழிற்திறன் பயிற்சி, மகளிர் தொழில் முனைவோர் பயிற்சி, ஊராட்சி அளவிலான குழுக்கூட்டமைப்புகளுக்கு ஊக்கத் தொகை தலா ரூ.1 வழங்குதல், மகளிரை குடும்பத்தலைவியாக கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதார பயிற்சி போன்றவை இந்த இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வருகின்றது.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பின்வரும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு அலுவலகம் அமைத்தல், உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்குதல், கணினிப் பொருட்கள் கொள்முதல் செய்தல், புதிய சுய உதவிக்குழுக்கள் அமைத்தல், புதிய சுய உதவிக்குழுக்களுக்கான பயிற்சிகள் மற்றும் ஆதார நிதி வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக தனிநபர் கடன் உதவி வழங்குதல் போன்ற செயல்பாடுகளுக்கான நிதி விடுவிக்கப்பட்டு செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் (மகளிர் திட்டம்) 6698 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.211.34 கோடி செலவில் கடந்த ஓர் ஆண்டு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 5753 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு பெற்று சுய உதவிக்குழு பெண்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் கிராமப்புறங்களில் வாழ்கின்ற இளைஞர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தினை அரம்பித்து அதன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு தொழில் ரீதியாகப்பயிற்சியளித்து, தொழில் தொடங்கிட தேவையான உதவிகளைச்செய்து அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திடவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை மாவட்டத்தில் 2011 முதல் 2017 வரை 18 வயது முதல் 60 வயது வரையுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் சுமார் 3,06,217 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு ரு.375.18 கோடி தொகையினை சேமிப்பாக வைத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், திருநங்கைகள் ஆகியோர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 64 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.2.56 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வறுமை ஒழிப்பிற்காக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 200 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.4.74 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 240 நபர்களுக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 3,06,217 உறுப்பினர்கள் கொண்ட மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ரூ.375.196 கோடி தொகை சேமிக்கப்பட்டுள்ளது. 2,053 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல் நிதிக்கடனாக ரூ.2.39 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 34,581 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.755.52 கோடி வங்கிகளின் மூலம் நேரடிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

228 ஊராட்சி இளைஞர்களுக்கு ரூ.262.662 லட்சம் செலவில் தொழிற்மேம்பாட்டிற்கு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 7,084 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 240 தனியார் நிறுவனங்களினர் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 189 ஊராட்சிகளுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் பற்றிய துவக்க நிலை செயல்பாடுகளுக்காக ரூ.69.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மகளீரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தம் தமிழக அரசின் இந்த சிறப்புத் திட்டத்திற்கு கோவை மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...