வால்பாறையில் தோட்டக்கலை துறை சார்பில் ஆண்டுதோரும் நடைபெரும் கோடை விழா


கோவை மாவட்டத்தின் கோடை வசந்ததலமாக வால்பாறை இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க தமிழகம் மற்றும் பிர மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து இயற்கை சூழலை ரசித்து செல்வார்கள். அரசு சார்பக ஆண்டு தோறும் கோடை விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழா நேற்று காலை துவங்கியது.



விழாவை ஒட்டி தோட்டக்கலை துறை சார்பாக 12,000 கொய் மலர்களை கொண்டு அமைக்கப்பட்ட கங்காரு மற்றும் ஒட்டகமும், 100 கிலோ காய்கறிகளால் செய்யப்பட்ட பறக்கும் குதிரையும், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. வனத்துறை அரங்கில் வைக்கப்பட்டுள்ள சிறுத்தைகளை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. டான் டீ, ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை, சுகாதார துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, ஆவின் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை வட்டாட்சியர் பாஸ்கரன் வரவேற்றார், தோட்டக்கலை துணை இயக்குநர் ராமகிருஷ்ணன், கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் விஜயகுமார், வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர் நகராட்சி பொறியளர் ராஜகோபால் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் நகராட்சி அலுவலர்கள் அரசுதுறை அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 



தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் கருமத்தம்பட்டி சங்கமம் குழுவினரின் ஒயிலாட்டம் மற்றும் மூலனூர் மின்னல் கலைக்குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும் மற்றும் கோவை மாநகர காவல்துறை சார்பில் நுன்னரிவு மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அரசு ஆண்கள் மேல் நிலப்பள்ளி, வால்பாறை, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி, வால்பாறை தூய இருதய மேல் நிலைப்பள்ளி, ரொட்டிக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 



இவ்விழாவானது ஆண்டுதோரும் மே கடைசி வாரத்தில் நடைபெற்றுவருகிறது. ஆனால் இவ்விழாவானது வருடம் தோரும் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். மேலும் கோடைவிழா நடைபெறும் நாட்களை முன்னதாகவே மக்களுக்கு தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

இன்று மாலை நிறைவு பெரும் இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றி  பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...