இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய மோடி அரசு சட்டமியற்றியதைக் கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற தமிழ்புலிகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது. பசு கன்றுகளை விற்பதற்கு உரிய நடைமுறைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல கால்நடை துறையிடம் சான்று பெற வேண்டும் என மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.
இதனால் நாடு முழுவதும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களை வஞ்சிக்கம் மத்திய அரசின் இத்தகையப் போக்கைக் கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவபொம்யை எரிக்க முயன்றனர்.
அப்போது, மத்திய அரசு தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் பின்பற்றி வருவதாகவும், தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை பின்பற்றி ஆட்சி நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த தமிழ்புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது. பசு கன்றுகளை விற்பதற்கு உரிய நடைமுறைகள், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு செல்ல கால்நடை துறையிடம் சான்று பெற வேண்டும் என மத்திய அரசு நேற்று மாலை அறிவித்தது.
இதனால் நாடு முழுவதும் மாட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் மாட்டிறைச்சி உண்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களை வஞ்சிக்கம் மத்திய அரசின் இத்தகையப் போக்கைக் கண்டித்து தமிழ்புலிகள் கட்சியினர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மோடியின் உருவபொம்யை எரிக்க முயன்றனர்.
அப்போது, மத்திய அரசு தலித்துகளுக்கும், முஸ்லீம்களுக்கு எதிரான கொள்கையைக் பின்பற்றி வருவதாகவும், தொடர்ந்து இந்துத்துவா கொள்கையை பின்பற்றி ஆட்சி நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக இந்த தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என ஆர்பாட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த தமிழ்புலிகள் கட்சியினர் 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.