போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை உடனடியாக வழங்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் - சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புளூ ஹில்ஸ் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் தலைமையில் மாநிலக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.



இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...