நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள புளூ ஹில்ஸ் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் தலைமையில் மாநிலக் குழுக்கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.

இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து சிஐடியு மாநில தலைவர் சவுந்தராஜன் கூறுகையில், வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் அமைச்சர் கூட்டத்தில் அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகை வழங்காவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
டாஸ்மாக் கடைகளில் பணி இழந்த ஊழியர்களுக்கு அரசுத் துறையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். உதகையில் உள்ள எச்.பி.எப். தொழிற்சாலையில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக எச்.பி.எப். நிர்வாகம் ஊழியர்களின் ஊதியத்தை வழங்க வேண்டும்" என்றார்.

இந்த மாநிலக் குழுக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகநாயனார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொருளாளர் தயாளன் உட்பட ஏராளமான அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.