நகர்ப்பகுதியை விட்டு, இடம் பெயர்ந்து செல்ல, சிஎம்சி காலனி துப்புரவு தொழிலாளர்கள் தயக்கம்

சி.எம்.சி., காலனிக்கு பின்புறம், சிட்டி மாநகராட்சி பள்ளிக்கான மைதானம் உள்ளது. அதன் ஓரத்தை ஆக்கிரமித்து, 400 குடும்பங்கள் ஓட்டு வீடு அமைத்து, குடியிருக்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்துள்ளனர். இப்பகுதிக்கு பிரத்யேகமாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படுகிறது. உப்புத்தண்ணீர் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாக்கடை கால்வாய் இல்லாததால், வீட்டுக்கு முன் கழிவு நீர் தேங்கியுள்ளது. மின் வசதி இல்லாததால், அருகில் உள்ள சி.எம்.சி., காலனியில் தற்காலிக இணைப்பு பெற்று, தற்போது பயன்படுத்துகின்றனர். 



இப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனை சந்தித்து, 'மின் இணைப்பு பெற்றுத்தர வேண்டும்; புதிய குடியிருப்பு கட்டித்தர வேண்டும்' எனக்கோரி மனு கொடுத்தனர். அதன்பிறகு ரூபாய் 377 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் கூறுகையில்; 'சி.எம்.சி., காலனி மைதானத்தில், 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். போதிய அடிப்படை வசதியில்லை. காலனியில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகிறோம். மின் இணைப்பு இல்லாததால், குழந்தைகள் கல்வி பாதிக்கிறது. புதிதாக குடியிருப்பு கட்டிக்கொடுக்க வேண்டும்' என மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை' என்றும் மாறாக, வெள்ளலூரில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் இடம் பெயருமாறும் கூறினார். 

இங்கு வசிக்கும் பெரும்பாலனோர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அதிகாலை 5 மணியளவில் பணிக்கு செல்லவேண்டும். இதனால் வெள்ளலூர் பகுதியில் இருந்து வர பேருந்து வசதி கிடையாது. மேலும் பல்வேறு இடங்களுக்கு இங்கு உள்ளவர்கள் பணிக்கு செல்ல வேண்டும். எனவே கோவை மாநகரில் தூய்மை பணியாளர்களுக்கு சிஎம்சி காலனி மைதானத்தில் குடியிருப்புகளை அமைத்து தருமாறு வேண்டுகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகள் கட்டவும், சி.எம்.சி., காலனி குடியிருப்பை செப்பனிட மதிப்பீடு தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிதியில் குடியிருப்பு கட்ட போதிய இடமில்லை. நகர்ப்பகுதியை விட்டு, அங்கு இடம் பெயர்ந்து செல்ல, துப்புரவு தொழிலாளர்கள் தயங்குகின்றனர், என்றனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...