அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவரை பத்திரிகையாளர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இருப்பிட மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவரை பத்திரிகையாளர்கள் எனக் கூறி வந்த மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இருப்பிட மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய மற்ற நபர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அரசு மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.