சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்



கோவை சிங்காநல்லூர் பகுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட மதுபானக்கடை, சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும். 

இதனால் இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைத்தது.

இந்நிலையில் புதிதாக விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர். 

இப்போராட்டத்தில் போது, விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த டாஸ்மாக் கடையினை மூட நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடை முன்பாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த மறியல் போராட்டம் காரணமாக சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...