12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் கீழ் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் வளையான்குட்டை தோட்டம் ஊராட்சியில் வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விதி 110-ன் கீழ் வேளாண்பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பல்வேறு திட்டங்கள் பெற்று பயன்பெற வேண்டுமென்ற அடிப்படையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு மையம் செயல்படும் வகையில் முன்னோடி விவசாயி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதி விவசயிகளுக்கு எவ்வகையான உபகரணங்கள் வழங்கினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டு அதன் படி இயந்திரத்தின் மொத்த மதிப்பு ரூ.25 இலட்சத்திலிருந்து பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மானியம் கிடைத்திடும் வகையில் தேவையான வேளாண் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

அந்த வேளாண் இயந்திரத்தின் மூலம் பயனாளி தங்கள் பயன்பாட்டிற்கு போக அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவார். இவ்வாறு வேளாண் பொறியியல் துறையின் மூலம் இப்பணியை மேற்கொள்ளும்பொழுது அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தங்கள் பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள பேருதவியாக இருக்கின்றன.கடந்த ஆண்டு மட்டும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிராக்டர், ரோட்டா வேட்டர், ஐந்து கொத்து கலப்பை, ஒன்பது கொத்து கலப்பை, சுழல் கலப்பை, தட்டு வெட்டும் கருவி முதலியவை அடங்கும். இதன் மூலம் அந்தந்த பகுதிக்கு தேவையான உபகரணங்களை பெற்று பயன்பெறுவதே ஆகும். 

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்பொறியியல் துறையின் மூலம் 17 மையங்களில் ரூ.1.70 கோடி மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 189 விவசாயிகளுக்கு 55.90 கோடி மானியத்தில் பவர் வீடர், தட்டு வெட்டும் கருவி, ஸ்பிரேயர், பவர் டிரில்லர், ரோட்டாவேட்டர் ஆகிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளி, மின் சக்தி மூலம் மோட்டார் இயங்கும் திட்டம், மின் சக்தி மூலம் உலர்த்தி அமைக்கும் திட்டம், தேசிய வளம் குன்றா வேளாண் திட்டம், ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் உபகரணங்கள் வழங்ப்படுவதுடன் மேலும்  பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டம் துவக்கப்பட்டு நடுத்தர தடுப்பணைகள் அமைத்து பயன்பெறும் வகையில் இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் 10 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன. மேலும் தங்கள் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானித்திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...