தமிழர்களை இழிவுபடுத்தியதாக புகார் - ரஜினிகாந்த் கொடும்பாவி எரிப்பு.


நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் பலர் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போய்விட்டார்கள் என தமிழர்களை இழிவுபடுத்தியதாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழர்களை இழிவுபடுத்தி ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் பதிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியபடி, கொடும்பாவியை எரித்து போராடட்ம் நடத்தினர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதை தாங்கி கொள்ளமுடியாமல், ஒட்டு மொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ரஜினி பேசியிருப்பதாக அக்கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் குற்றம்சாட்டினார்.

தமிழ் மக்கள் என்னை வாழவைத்தவர்கள் என பேசும் ரஜினி தமிழர்களை இழிவுபடுத்தியதை ஏற்க முடியாது எனவும், தனது திரைப்படங்கள் வெளியிடும் போது எல்லாம் அரசியலுக்கு வருவதாக நாடகம் ஆடுவதாக கூறிய அவர், ரஜினிகாந்த் இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...