கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. பெற்றோரின் கவனக்குறைவால் நேர்ந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore: கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தை, சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேணுகோபால் - கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு தன்வந்த் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி மழலை மாறாத தன்வந்த் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
வீட்டின் அருகே தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி முழுமையாக காங்கிரீட் மூலம் மூடப்படாமல், வெறும் தகரத்தைக் கொண்டு தற்காலிகமாக மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. விளையாட்டின் இடையே தன்வந்த் அந்த தகரத்தின் மீது ஏறியபோதோ அல்லது அதை நகர்த்தியபோதோ எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறிது நேரமாக வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் சத்தம் திடீரென கேட்காததால் பதறிப்போன பெற்றோர் வீட்டின் வெளியே வந்து தேடினர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் முன்பிருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர்.
அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை உடனடியாக மீட்டு தொட்டியில் இருந்து வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் இருந்தது. பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரத்தினபுரி காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரின் சிறிய கவனக்குறைவால், சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டி ஒரு பச்சிளம் குழந்தையின் இன்னுயிரை பறித்துள்ள கோரச் சம்பவம் ரத்தினபுரி பகுதி மக்களை பெரும் சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேணுகோபால் - கலைவாணி தம்பதியினர். இவர்களுக்கு தன்வந்த் என்ற ஒரு வயது ஆண் குழந்தை உள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி மழலை மாறாத தன்வந்த் வழக்கம்போல் தனது வீட்டின் முன்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான்.
வீட்டின் அருகே தரையோடு தரையாக அமைக்கப்பட்டிருந்த நிலத்தடி தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி முழுமையாக காங்கிரீட் மூலம் மூடப்படாமல், வெறும் தகரத்தைக் கொண்டு தற்காலிகமாக மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. விளையாட்டின் இடையே தன்வந்த் அந்த தகரத்தின் மீது ஏறியபோதோ அல்லது அதை நகர்த்தியபோதோ எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளான்.
சிறிது நேரமாக வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் சத்தம் திடீரென கேட்காததால் பதறிப்போன பெற்றோர் வீட்டின் வெளியே வந்து தேடினர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் சந்தேகம் அடைந்த அவர்கள் வீட்டின் முன்பிருந்த தண்ணீர் தொட்டியைத் திறந்து பார்த்தனர். அப்போது குழந்தை தண்ணீருக்குள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு பெற்றோர் கதறித் துடித்தனர்.
அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை உடனடியாக மீட்டு தொட்டியில் இருந்து வெளியே எடுத்தனர். ஆனால் குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் இருந்தது. பெற்றோர் உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ரத்தினபுரி காவல்துறையினர், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரின் சிறிய கவனக்குறைவால், சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டி ஒரு பச்சிளம் குழந்தையின் இன்னுயிரை பறித்துள்ள கோரச் சம்பவம் ரத்தினபுரி பகுதி மக்களை பெரும் சோகத்திலும் கண்ணீரிலும் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.