சையானுக்கு தற்போது அறுவை சிகிச்சை தேவையில்லை- கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ரங்கநாதன் பேட்டி


நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சையான் என்பவர் கடந்த இரு வாரத்திற்கும் மேலாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 



இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சயான் நேற்று இரவு 11.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பொறுப்பு முதல்வர் ரங்கநாதன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

சயானுக்கு தேவையான மேல் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எலும்பு, குடல் மற்றும் உடல் நோய் தொடர்பான சிகிச்சைகள் சீராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்கள் சரியாகி வருகிறது. இங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சயானுக்கு தற்போது எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. உரிய மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...