கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது காலில் பலத்த எலும்பு முறிவு காயம் ஏற்பட்டது. வேறொரு சம்பவத்தில், மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலையைக் கடந்த சுமார் 40 வயது அடையாளம் தெரியாத நபர் மீது பைக் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு சம்பவங்களிலும் தொடர்பான வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: கோவையில் ஒரே நாளில் நிகழ்ந்த இரண்டு தனி சாலை விபத்துகளில் ஒரு இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை ராமர்கோவில் வீதி சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரத்தைச் சேர்ந்த அருள் என்பவரது மகன் அஸ்வின் (21), நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ கணபதி கிரானைட்ஸ் எதிரே, எதிர்திசையில் வந்த கார் திடீரென வலதுபுறமாக திரும்பிய போது எதிர்பாராதவிதமாக அஸ்வினின் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் நிலைதடுமாறி விழுந்த அஸ்வினின் இடது காலில் பலத்த எலும்பு முறிவு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த சோமையம்பாளையம் காலப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த முத்து ராகுல் (31) என்பவர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு எஸ்.எஸ்.ஐ சரளா வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதேபோல், கோவை மேட்டுப்பாளையம் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தம் சக்தி விநாயகர் கோவில் அருகே நேற்று முன்தினம் மற்றொரு விபத்து நிகழ்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றார். அப்போது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வந்த பைக், பாதசாரி மீது பலமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து செல்வபுரம் நார்த் ஹவுசிங் யூனிட்டைச் சேர்ந்த பைக் ஓட்டுநர் ஜமீஷா (32) என்பவர் மீது கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...