கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளி பிரதீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, முதற்கட்டமாக கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). தற்போது இருவரும் சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததுடன், பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் அருகேயுள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரது தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக, பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி கிரிஜா (54). தற்போது இருவரும் சாமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது இளைய மகன் பிரதீப் குமார் (34), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்ததுடன், பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு பிரதீப் குமாரை, வெள்ளமடை பூங்கா நகரைச் சேர்ந்த சிலர் சோமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கார்டன் அருகேயுள்ள காலியிடத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து அவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த பிரதீப் குமார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவரது தாய் கிரிஜா அளித்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக, பூங்கா நகரைச் சேர்ந்த கார்த்திக் (44), பிரகாஷ் (26), ஹரிகிருஷ்ணன் (23) மற்றும் மதுரையைச் சேர்ந்த சிவா (24) ஆகிய 4 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரதீப் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.