துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தியிருந்த 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில் மாநகர காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனையில் 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவு பரிசோதிக்கப்பட்டு, 100 டெசிபலுக்கு மேல் இருந்த ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகளின் எண்ணிக்கை 22 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கவும், மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக சாலைகளில் செல்ல உதவவும் மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக செல்லும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தியுள்ள வாகனங்கள், கண்கள் கூசும் LED விளக்குகள் பொருத்தியுள்ள வாகனங்கள் உள்ளிட்டவை நவீன கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதங்களும் விதிக்கப்பட்டு வருகின்றன.

கோவை மேற்கு மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெரியசாமி, கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் துடியலூர் பகுதியில் அதிரடி வாகனச் சோதனை நடத்தப்பட்டது. சாலையில் வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் ஹாரன்களை அடித்து நவீன டெசிபல் அளவீட்டு கருவி மூலம் ஒலி அளவை பரிசோதித்தனர்.



100 டெசிபலுக்கு மேல் ஒலி எழுப்பிய 10க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றில் இருந்து ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் கண்கள் கூசும் அளவுக்கு LED விளக்குகள் பொருத்தியிருந்த வாகனங்களில் இருந்து விளக்குகளும், பம்பர் பொருத்தியிருந்த வாகனங்களில் பம்பர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களை வே பிரிட்ஜ் மூலம் எடை போட்டு பரிசோதித்து, அதிக எடை ஏற்றி வந்த வாகனங்களுக்கு கூடுதலாக உள்ள ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் மாநகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், துரை, பிரேம்குமார் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கையில், "சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துகளை தடுக்கவும் இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...