கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நம்பர் 10 முத்தூரைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் என்பவர் கடந்த எட்டு நாட்களாக விதிமீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை: பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததாகக் கண்டறியப்பட்ட ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

நம்பர் 10 முத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி முதல், விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். எட்டு நாட்களாக நீடித்த அவரது போராட்டத்திற்கு விவசாயிகள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.



விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரிகளால் கிணத்துக்கடவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக குவாரிகளில் அதிக அளவில் வெடிபொருட்கள் பயன்படுத்தி கற்கள் வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, கிணறுகள் வறண்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக பல ஆண்டுகளாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகம், தாசில்தார், வருவாய்த்துறை என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

போராட்டம் பரவலான கவனத்தை ஈர்த்ததைத் தொடர்ந்து, நேற்று சார் ஆட்சியர் தலைமையில் எட்டு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 5 குவாரிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கல்குவாரிகளின் செயல்பாடு மற்றும் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்தனர்.



அந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு கல்குவாரிகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...