சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்


கோவை, சரவணம்பட்டி, சிவானந்தா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் சங்கரா கண் மருத்துவமனையின் 40-வது ஆண்டு விழாவின் நினைவாக வரும் மே 21-ம் தேதியன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்கும் "கேளடி கண்மணி" எனும் இசை நிகழ்ச்சி கோவை ஹிந்துஷ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுக்கு 9965511097 மற்றும் 9965511068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது bookmyshow.com என்ற இணையதளத்தின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஆர்.வி.ரமணி கூறியதாவது:-

சங்கரா கண் மருத்துவமனை கடந்த 1977-யில் டாக்டர் ஆர்.வி.ரமணி மற்றும் அவரது குழுவினரால் கோவை, ஆர்.எஸ்.புரம், காமாட்சியம்மன் கோவிலில் துவங்கப்பட்டது. பின் 1982-யில் காஞ்சி ஆச்சாரியரின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீ காஞ்சி காமகோடி மெடிக்கல் ட்ரஸ்ட் தொடங்கப்பட்டது.

1980-யில் இந்தியாவில் அதிக அளவில் பார்வைக் குறைபாடு நோய் இருந்தது. அந்த சமயத்தில் அதற்கு தீர்வுகான சங்கரா கண் மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 1985-யில் டாக்டர் ரமணியின் வழிகாட்டுதலிலும், குறிப்பாக டாக்டர் எஸ்.பாலசுப்பிரமணியத்தின் பங்கேற்பாலும் மருத்துவ துறையில் கண் சிகிச்சைக்கென பிரத்யேக பிரிவு தொடங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்தே சரவணம்பட்டி, சிவானந்தாகாலனி பகுதியில் சங்கரா கண் மருத்துவமனை துவங்கப்பட்டது. 

தற்போது கோவை, கிருஷ்ணன் கோவில், ஆந்திரா மாநிலம் குண்டூர், கர்நாடகா மாநிலம் பெங்களூர், ஷிமோகா, குஜராத்தில் ஆனந்த், பஞ்சாபில் லூதியானா, உத்திரபிரதேசத்தில் கான்புர் ஆகிய இடங்களில் சங்கரா கண் மருத்துவமனைகள் செயல்பட்ட வருகிறது. விரைவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர், மத்தியபிரதேசத்தின் இந்தூர், பான்வெல், தெலுங்கானாவின் ஹைதராபாத் ஆகிய இடங்களிலும் அதன் செயல்பாடுகள் துவங்கும்.

தற்போது மருத்துவர்கள், 1800 முழு நேர ஊழியர்களுடனும், தன்னார்வலர்களுடனும், தன்னார்வ அமைப்புகளுடனும் இணைந்து தனது சேவையினை சங்கரா கண் மருத்துவமனை செயலாற்றி வருகிறது" என்றார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...