ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்புலன்ஸை சோதனையிட்டதில் அதில் மறைத்து கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


கோவை: ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் இருவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரச்சின்னமருது (28) என போலீசார் தெரிவித்தனர்.

ரகசிய தகவலின் பேரில், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் சென்ற டாடா விங்கர் ஆம்புலன்ஸை சோதனையிட்டபோது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ஆம்புலன்ஸில் கஞ்சாவை கடத்தினால் வழக்கமான போலீஸ் சோதனைகள் மற்றும் சுங்கச்சாவடி கண்காணிப்பில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என கருதி இந்த முறையை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற முறையில் ஏற்கனவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா, இந்த கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...