ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்புலன்ஸை சோதனையிட்டதில் அதில் மறைத்து கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


கோவை: ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் இருவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரச்சின்னமருது (28) என போலீசார் தெரிவித்தனர்.

ரகசிய தகவலின் பேரில், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் சென்ற டாடா விங்கர் ஆம்புலன்ஸை சோதனையிட்டபோது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ஆம்புலன்ஸில் கஞ்சாவை கடத்தினால் வழக்கமான போலீஸ் சோதனைகள் மற்றும் சுங்கச்சாவடி கண்காணிப்பில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என கருதி இந்த முறையை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற முறையில் ஏற்கனவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா, இந்த கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது...

வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.1.13 லட்சம் பறிமுதல்

கோவை மாவட்டம் வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்...

ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்...

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...