ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தல்; கோவையில் இருவர் கைது

கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆம்புலன்ஸை சோதனையிட்டதில் அதில் மறைத்து கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.


கோவை: ஆம்புலன்ஸில் 21 கிலோ கஞ்சா கடத்தியதாக கோவை மாநகர காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீசார் இருவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கோவை பீளமேட்டைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் சிவகங்கை மாவட்டம் கட்டிக்குளத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரச்சின்னமருது (28) என போலீசார் தெரிவித்தனர்.

ரகசிய தகவலின் பேரில், உக்கடம்–வாலாங்குளம் மேம்பாலம் சாலையில் சென்ற டாடா விங்கர் ஆம்புலன்ஸை சோதனையிட்டபோது, வாகனத்திற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஆந்திரப் பிரதேசத்தின் இச்சாபுரத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி, கோவையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், ஆம்புலன்ஸில் கஞ்சாவை கடத்தினால் வழக்கமான போலீஸ் சோதனைகள் மற்றும் சுங்கச்சாவடி கண்காணிப்பில் இருந்து எளிதில் தப்பிக்க முடியும் என கருதி இந்த முறையை பயன்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இருவரும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற முறையில் ஏற்கனவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா, இந்த கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...