தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட 192 பேர் இரத்த தானம் செய்தனர்.


Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது. சிங்காநல்லூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ESI மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து ஜூன் 22, 2026 அன்று இந்த முகாம் நடத்தப்பட்டது.



காலை 9.00 மணிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக செயல் துணைவேந்தர் Dr. கா. சுப்ரமணியன் இந்த இரத்த தான முகாமை துவக்கி வைத்தார். சிங்காநல்லூர் ESI ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் Dr. உமாசரோஜினி தனது மருத்துவ குழுவினருடன் இம்முகாமை திறம்பட நடத்தி வந்தார்.



இம்முகாமில் பல்கலைக்கழக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 192 பேர் தானமாக இரத்த தானம் செய்தனர். உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இம்முகாம் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடையே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியது.

இரத்த தானம் செய்வது உயிர் காக்கும் பெருமையான செயல் என்பதை வலியுறுத்தி, தொடர்ந்தும் இது போன்ற முகாம்களை ஏற்பாடு செய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தானம் செய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...