பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமுதல் செய்ததுடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமுதல் செய்ததுடன், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி காவல் ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீசார் கணுவாய் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டைகளாக பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் இருந்த சுமார் 450 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் தஸ்காட் என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார், எத்தனை நாட்களாக இந்த விற்பனை வலையமைப்பு செயல்பட்டு வருகிறது, கோவையில் யாருக்கெல்லாம் புகையிலைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதியில் போதைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி காவல் ஆய்வாளர் இப்ராஹிம் பாதுஷா தலைமையிலான போலீசார் கணுவாய் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து காரை முழுமையாக சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டைகளாக பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, காரில் இருந்த சுமார் 450 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் இருந்த இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் மற்றும் தஸ்காட் என்பது தெரியவந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து கோவைக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் விசாரணையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கோவை புறநகர் பகுதிகளில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கடத்தலுக்கு பின்னால் உள்ள நபர்கள் யார், எத்தனை நாட்களாக இந்த விற்பனை வலையமைப்பு செயல்பட்டு வருகிறது, கோவையில் யாருக்கெல்லாம் புகையிலைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.