சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணி முடிக்க அறிவுறுத்தினார். சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.
Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் இன்று காலை போஸ்டர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., உத்தரவின் பேரில் இப்பணி நடைபெற்றது.

வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு, சுத்தம் செய்யப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். இப்பணியில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு, சுத்தம் செய்யப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். இப்பணியில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.