ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை வழங்குதல், 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே-15 ஆம் தேதி முதல் (நாளை) போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சருடன் சிஐடியி, ஏஐடியுசி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் (மே 15) திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று முதலே அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு ரயில்சேவை துவக்கம்:-
அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேத் துறையின் சார்பில் நாளை கோவை மற்றும் சென்னையில் சிறப்பு ரயில் சேவையினை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயில்கள் அனைத்தும் முன்பதிவு அற்றவை ஆகும். இதில், 15 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகளும், இரண்டு பொருட்கள் அடங்கிய பெட்டிகளும் இடம்பெரும்.
இந்த கோவை மற்றும் சென்னைக்கான சிறப்பு ரயில் சேவை நேரம் மற்றும் விபரங்கள் கீழே வருமாறு:
