கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள் மற்றும் புனரமைக்கப்பட்ட கழிவறைகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 25இல் உள்ள கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 25க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், புனரமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.








கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.








இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...