கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு ஆய்வுப் பணிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அமைச்சர் நேரு உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு கலந்துரையாடல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு வீரர்கள் அமைச்சரிடம், தங்களுக்கு தேவையான டி-ஷர்ட்கள், காலணிகள் உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.



இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். கலந்துரையாடலில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

இன்று மாலை கோவையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...