லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Coimbatore:
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு விமானம் மூலம் சென்னை செல்லும் நோக்கில் கோவை வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையம் அருகில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் மருத்துவமனையிலேயே ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செங்கோட்டையன் நாளை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு விமானம் மூலம் சென்னை செல்லும் நோக்கில் கோவை வந்திருந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலையம் அருகில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் காய்ச்சல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் அவர் மருத்துவமனையிலேயே ஓய்வில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் செங்கோட்டையன் நாளை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.