கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் துறை ₹19,500 அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியது.


Coimbatore: கோவை சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில், இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி மற்றும் ஆட்டம் போட்டபடி வேகமாக சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, வைரலான வீடியோவை அடிப்படையாக கொண்டு வாகன எண்கள் மூலம் சம்பந்தப்பட்ட இளைஞர்களை கோவை மாநகர காவல் துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் பொதுப் பாதையில் பிறருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தாக வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு மொத்தமாக ₹19,500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், வாகனத்தை இயக்கிய நான்கு இளைஞர்களையும் காவல் துறையினர் எச்சரித்து, பொதுச் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Newsletter

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...

கோவை குனியமுத்தூரில் கத்தியை காட்டி மிரட்டி கல்லூரி மாணவரிடம் ரூ.47,000, செல்போன், செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் கல்லூரி மாணவரை நான்கு பேர் மிரட்டி வங்கி கணக்கிலிருந்து ரூ.47,000 பணம் பரிமாற்றம் செய்யச் சொன்னதோடு...