விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியர்களை ஆனைமலை டிஎஸ்பி பவித்ரா எச்சரித்தார்.


Coimbatore: கோவை: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 அரசு மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டதுடன், போதைப் பொருள் மற்றும் கள்ளச்சந்தை மது விற்பனையை கண்காணிக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



இதன் தொடர்ச்சியாக, ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திரா நகர், வேட்டைக்காரன்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வால்பாறை உட்கோட்ட டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது கடை ஊழியர்களிடம் பேசிய டிஎஸ்பி பவித்ரா, “டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் கட்டாயம் மூடப்பட வேண்டும். ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன், கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.

மேலும், கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...