சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை சரவணம்பட்டியில் மினி லாரி ஒன்றின் உள்ளே டிரைவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் புல்லமடை கீழக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜு (வயது 53). இவர் தற்போது கோவை சரவணம்பட்டி சிவராம் நகர் ஆடி வீதியில் தங்கி, சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு மது அருந்தும் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.




இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல் வேலைக்குச் சென்ற ராஜு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே அவரது மினி லாரி நீண்ட நேரமாக கேட்பாரற்றுக் கிடப்பதாக, அவ்வழியாகச் சென்றவர்கள் அவரது மகன் அன்பரசனுக்கு (23) செல்போனில் தகவல் தெரிவித்தனர்.




தகவல் அறிந்த அன்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, லாரியின் டிரைவர் இருக்கையில் அவரது தந்தை ராஜு அசைவற்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்தார். வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்ததில் ராஜு ஏற்கனவே உயிரிழந்து விட்டது உறுதியானது.




தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜு எவ்வாறு உயிரிழந்தார், மர்ம மரணத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...