கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கைதிகள் உட்பட 4 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை:

கோவை மத்திய சிறையில் மகேஷ் @ மகேந்திரன் (26), சுராளி @ சுரேந்திரன் (22), கலாநிதி @ அபிவிஷ்ணு (27) ஆகியோர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்து அனுமதி பெற்றிருந்தார்.

அதன்படி, கடந்த 12ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு வந்த நவீன், கைதிகளுக்கு வழங்குவதற்காக வர்க்கி உள்ளிட்ட தின்பண்டங்களை கொண்டு வந்துள்ளார். அவற்றை மகேஷ் @ மகேந்திரனிடம் வழங்குமாறு கூறி சிறைக் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறை விதிமுறைகளின்படி, கைதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது வர்க்கி பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் திருமலை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், NDPS சட்டம் மற்றும் சிறைச்சாலை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கஞ்சா கடத்த முயன்ற நவீன் மற்றும் அதை பெற முயன்ற கைதிகள் மகேஷ் @ மகேந்திரன், சுராளி @ சுரேந்திரன், கலாநிதி @ அபிவிஷ்ணு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சரவணம்பட்டியில் கையகப்படுத்தப்பட்ட 73 வாகனங்கள்; உரிமையாளர்களுக்கு அழைப்பு

கோவை சரவணம்பட்டி காவல் நிலைய எல்லையில் கையகப்படுத்தப்பட்ட 73 இருசக்கர வாகனங்களை உரிய ஆவணங்களுடன் வந்து பெற்றுக்கொள்ள பொத...

நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று கோவை உட்பட 10 மாவட்...

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...