பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. கோட்டூர் போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே குடும்ப பூசல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கோட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். அதே பகுதியில் அருகில் ஆனந்த் (29) என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார்.




தமிழ்ச்செல்வனுக்கும் ஆனந்தின் மனைவி பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். தகராறின் போது ஆனந்த் பாலகிருஷ்ணனை தள்ளியதில் அவர் கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.




சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தனது மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று ஆனந்த் தன்னை அடித்துவிட்டதாகவும், உடல் சோர்வாக இருப்பதாகவும் கூறினார். உடனடியாக தமிழ்ச்செல்வி தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.




ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார். உடனடியாக தகவலறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.




இது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி ஆனந்த் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...