வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Coimbatore:

கோவையின் தென்கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது மே மாதம் பாதியை எட்டி உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலைப் பாதைகளில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி நாளை மே 13-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாளை காலை முதல் மலையேற வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையும், அபாயம் உள்ளதால், இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளது.

கோடைக்கால சீசன் முடிவுக்கு வந்து உள்ள நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்த பக்தர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...