வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Coimbatore:

கோவையின் தென்கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது மே மாதம் பாதியை எட்டி உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலைப் பாதைகளில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி நாளை மே 13-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாளை காலை முதல் மலையேற வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையும், அபாயம் உள்ளதால், இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளது.

கோடைக்கால சீசன் முடிவுக்கு வந்து உள்ள நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்த பக்தர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...