போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சலுகை விலையில் கிடைக்கும் சுற்றுலா பேக்கேஜ்கள் இதற்கு முக்கிய காரணம்.


Coimbatore: கோடைகால விடுமுறையையொட்டி கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி கோவை மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. தினமும் 10,000 பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து காணப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக வளைகுடா நாடுகள் வழியாக செல்வதை பெரும்பாலான பயணிகள் தவிர்த்து விட்டனர்" என்றனர்.


இதற்கு மாறாக கோவையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பாங்காக் போன்ற நாடுகளுக்கு கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தொடர்ந்து சென்று வருகின்றனர். முன்பு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற நிலை காணப்பட்டது.


தற்போது பல தரப்பு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் சலுகை விலையில் சுற்றுலா பேக்கேஜ் பல்வேறு வெளிநாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலிருந்து சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை தொடரும் காரணத்தால் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...