வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


கோவை:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காலில் ஏற்பட்ட புண் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், பூரண குணமடைந்து நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வானதி சீனிவாசன் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து நேரடியாக தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து அவரை வீட்டிற்குள் வரவேற்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பிய வானதி சீனிவாசனுக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் வீட்டிலுள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றினார். அவரது பூரண நலனுக்காக குடும்பத்தினரும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

சிகிச்சைக்குப் பிறகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தர உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வானதி சீனிவாசன் வீடு திரும்பியது பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...