கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் தேர்தல் பயிற்சி வகுப்பு ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.


Coimbatore: தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026க்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran IAS இன்று (15.04.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 117 கவுண்டம்பாளையம், 118 கோயம்புத்தூர் வடக்கு, 121 சிங்காநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.







கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட G.N.Mills கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவ இந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சாலை, பீளமேடு P.S.G. தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.






வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்கு பதிவு அலுவலர் 1, வாக்கு பதிவு அலுவலர் 2 மற்றும் வாக்கு பதிவு அலுவலர் 3 ஆகிய அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார். பயிற்சியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.






தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்காக தபால் வாக்கு செலுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் செயல்முறைகள் சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.






இந்த ஆய்வுகளின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) வினோத்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர்/தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) வாணிலட்சுமி ஜெகதாம்பாள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதுரா, கோயம்புத்தூர் வடக்கு வட்டாட்சியர் விஜயரங்க பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர்/உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி ஆணையர்கள் சண்முகம், நர்மதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...